இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்டு ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிபி ரத்நாயக்க தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்க விற்கு முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை அவருக்கு எதிரான வாக்குகள் அதிகம் 30 லட்சம் வரையானோர் வாக்களிக்கவும் இல்லை, எனவே எதிர்காலத்தில் பாரிய சவால்கள் உள்ளன அந்த சவால்களில் இருந்து தாய் நாட்டை மீட்பதற்கு அவருக்கு நாம் ஆதரவு வழங்குவோம். அரசியலமைப்பு மறுசீரமைப்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்குதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாம் முழு ஆதரவு வழங்குவோம் அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
