கோட்டாவின் வழியில் அனுர எச்சரிக்கின்றார் மகிந்தானந்த அழுத்கமகே

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க விற்கு ஆதரவான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து பிறந்த கூட்டணியை உருவாக்கி பொதுத்தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை கட்டி எழுப்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார் ரணில் விக்ரமசிங்க புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கினாலும்  பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. ஜனாதிபதி கோட்டபையவின் செயல்களையே தற்போது ஜனாதிபதி அனுகுமாரவும் செய்கின்றார்.

ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து 993 வாகனங்களை வேறு நிறுவனங்களுக்கு விநியோகித்தார் ஜனாதிபதி அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தை குறைத்தார் மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசாங்கம் அமைக்கப்பட்டபோது அந்த அரசாங்கத்தை நடத்துவது மிகவும் கடினமாக இருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.